Friday, 22 August 2008

கந்தளாய் வெந்நீர் ஊற்றில் காவற்துறைச் சிப்பாய் பலி

துப்பாக்கியின் குறிதவறியதில் காவற்துறை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – கந்தளாய் வெண்ணீர் ஊற்று காட்டுப் பிரதேசத்தில் உள்ள வீதியின் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவற்துறைச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை ஒன்றை விரட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது குறி தவறி தோட்டா காவற்துறை சிப்பாயின் மீது பாய்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

0 comments: