Thursday 21 August 2008

T.C.C ஐ தடைசெய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை கோரிக்கை

ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வரும் T.C.C என்ற தமிழ்க் கோடிநேசன் கமிட்டியை தடைசெய்யுமாறு இலங்கை அரசாங்கம் நேற்று(20) ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழர் புனர்வாழ்வு கழகம் தடைசெய்யப்பட்ட பின்னர், பிரான்சில் உள்ள இந்த ரி.சீ.சீ என்ற விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்பு அதிகளவான நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


இந்த அமைப்பை தடைசெய்யுமாறு கோரும் மகஜரை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தமிழ் கோடிநேசன் கமிட்டி கடந்த இரண்டு மாதங்களில் மூன்று மில்லியன் பிராங் நிதியைச் சேகரித்துள்ளது.

விடுதலைப்புலிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்த நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments: