Saturday 16 August 2008

வவுனியாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 11 படையினர் பலி- 19 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2008,

வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டை குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.


இதில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் பிற்பகல் 4:30 மணிவரை தீவிர தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் படைத்தரப்பில் இழப்புக்கள் ஏற்பட, அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.

இதில் 11 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.

No comments: