Thursday 21 August 2008

பணாங்கொட இராணுவ முகாமில் படைச் சிப்பாய் தற்கொலை

பாணாங்கொட இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (19) இடம்பெற்றுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த ஜயவீர என்பரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகாமுக்குள் மூன்று சிப்பாய்கள் காவல் கடமையை பொறுப்பேற்றிருந்தனர்.


மூன்று கட்டங்களாக இவர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களில் தற்கொலை செய்து கொண்ட லான்ஸ் கேப்ரல் இரவு 10 மணிக்கு தனது காவல் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.


இதனடிப்படையில் இவர் காவல் கடமையை பொறுபேற்றுக் கொண்டதும் ஏனைய இருவரும் ஓய்வெடுக்க சென்றுள்ளனர். சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்டதும் இவர்கள் சென்று பார்த்த போது லான்ஸ் கேப்ரல் துப்பாக்கி காயங்களுடன் கீழே விழுந்து கிடந்துள்ளார்.


துப்பாக்கிச் சூட்டில் அவரது மார்பு பகுதியிலும், தலையிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்ததாக ஹோமாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: