Saturday 23 August 2008

பிரபாகரனைக் காப்பாற்ற அவுஸ்ரேலியர் முயற்சி – திவயின

வாழ்க்கைக்கு மதிப்பளிப்போம் என்ற பெயரில் இலங்கையில் நடைபெறும் போருக்கு எதிராக மகஜர் ஒன்றில் 7 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் நடவடிக்கையில் அவுஸ்த்ரேலிய தன்னார்வ தொண்டர் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

ஜோன்சன் தோமஸ் என்ற தொண்டர் அமைப்பின் செயற்பாட்டாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சி என புலனாய்வுதுறையினர் கூறியுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்த்ரேலிய பிரஜை ஒருவர் வழி நடத்தும் அமைப்புபொன்று பிரபாகரனைக் காப்பாற்ற கையெழுத்து சேகரிக்கிறது என அந்த நாழிதழ் தலைப்பிட்டு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

No comments: