Wednesday 20 August 2008

ஐவரைத் தடுத்து வைக்க மகிந்த சிறப்பு உத்தரவு

கொழும்பு துறைமுக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஐவரை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைப்பதற்கான சிறப்பு அதிகாரத்தை, சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார்.

இதன்மூலம் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாது, நீதிமன்ற விசாரணையின்றி தடுத்து வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா முப்படைகளின் தளபதி, மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, ஊடகவியாலாளர் திஸ்ஸநாயத்தை அடுத்த மாதம் 5ஆம் நாள்வரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments: