Friday 22 August 2008

யாழில் துணைப்படை E.P.D.P குழுவினரின் கப்பம் அறவீடு தொடர்கி்றது

யாழ் குடாநாட்டில் துணைப்படை E.P.D.P குழுவினரின் கப்பம் அறவீடு தொடர்ந்து வருகின்ற போதிலும், அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் வெளியே அதனைக்கூறாது தவிர்த்து வருகின்றனர்.

பொதுமக்களின் வீடகளுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் துணைப்படை E.P.D.P குழுவினர் தம்மை கருணா குழு எனத் தெரிவித்து கப்பம் கோருகின்றனர்.

இடமொன்றைக் குறிப்பிட்டு அங்கு கப்பப் பணத்தைக் கொண்டுவந்து தருமாறு அச்சுறுத்தும் துணைப்படைக் குழுக்கள், இல்லையெனில் கடத்திச் செல்வோம், அல்லது சுட்டுக்கொல்வோம் என எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

சிறீலங்கா படைகளது இறுக்கமான தடைகள் காரணமாக துணைப்படைக் குழுக்களின் மிரட்டலுக்கு அஞ்சும் மக்கள் வேறு இடங்களுக்கு சென்று வாழ முடியாத நிலை காணப்படுவதாக எமது குடாநாட்டுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

துணைப்படை T.M.V.P குழுவினரும் கிழக்கிலும், வவுனியாவிலும் கப்பம் அறவிட்டு வருகின்றனர்.

No comments: