எதிர்காலத்தில் இலங்கையின் சில பகுதிகளில் அபாயகரமான அமில மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஓ.ஈ. இளப்பெரும எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மைய வருடங்களாக இலங்கையில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றங்களினால் அமில மழை பெய்யக்கூடிய அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறிப்பாக அனுராதபுரம், மஹாஇலுப்பள்ளம் மற்றும் ஊவா பகுதிகளில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழைக் காலத்தில் அமில மழை பெய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அமில மழை காரணமாக ஆறுகள், குளங்கள், தாவரங்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் தீங்கு ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் விவசாயத்துறைக்கு அமில மழை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமில மழை தொடர்பாக இலங்கையில் எவ்வித முறையான ஆய்வுகளும் இதுவரையில் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Thursday 21 August 2008
இலங்கையில் அமில மழை பெய்யக்கூடிய சாத்தியம் - பேராசிரியர் ஓ.ஈ.இளப்பெரும
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment