Tuesday 19 August 2008

மட்டக்களப்பில் பாதுகாப்பு தீவிரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி, காத்தான்குடி உள்ளிட்ட பிரதேசங்களில் படையினர் சிலர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த பாதுகாப்பு பலப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் இதற்கான படையினரின் முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

No comments: