Tuesday 19 August 2008

ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணியும் 300 ரூபாவும் வளங்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ருவான்வெல்ல பிரதேச கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் உணவுப் பொதியும் 300 ரூபா பணமும் வழங்கப்படும் என்ற உறுதிமொழியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரால் அழைத்துச் செல்லப்பட்டதக கூறப்படுகிறது.


ருவான்வெல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பளரின் ஆலோசனைக்கு அமைய தோட்டங்களில் இருந்து இந்த மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவர்களை ஏற்றிச் செல்ல இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூட்டம் முடிந்த பின்னர் உறுதியளிக்கப்பட்டவாறு உணவுப் பொதியும் 300 ரூபா பணமும் வழங்கப்படாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள், சுதந்திரக்கட்சியின் சார்பில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை தூஷண வார்த்தைகளால் திட்டியதுடன் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து காவற்துறையினர் தலையிட்டு, பிரச்சினைகயை சமரசம் செய்து வைத்துள்ளனர்.

No comments: