Saturday 23 August 2008

சிறுபான்மையினருக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் என்பதில் ஜேர்மன் நம்பிக்கை இழந்துள்ளது

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தாம் மேற்கொண்டு வந்த முயற்சிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஜேர்ஜென் வீத் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது,


இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு என ஜேர்மனி தெரிவித்து வரும் கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ தற்போதைய அரசாங்கம் செவிமடுப்பதில்லை. இலங்கையில் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்திற்கு அதிகாரங்களை வழங்கும் என்பதில் ஜேர்மனி நம்பிக்கை இழந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


எந்த ஒரு அரசும் ஆட்சிபுரியும் போது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். ஒரு சமூகத்திற்கு ஆதரவு வழங்குவதை விடுத்து எல்லா சமூகங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.


இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் சட்டங்களை ஏற்படுத்த வேண்டும். இலங்கையின் ஜனநாயகத்தை அனைத்துலக சமூகம் மதித்தே வந்துள்ளது. ஆனால் தற்போது அந்த நன்மதிப்பு சீர்குலைந்துள்ளது என ஜேர்மனிய தூதுவர் ஜேர்ஜென் வீத் சுட்டிக்காட்டி உள்ளார்.

No comments: