Thursday 21 August 2008

அம்பாறையில் தாயும், மகனும் கடத்திச் செல்லப்பட்டனர்

அம்பாறை, கல்முனையில் தாயும் மகனும் வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை வீதியிலுள்ள இவர்களது வீட்டிற்கு நேற்று அதிகாலை 1:30 அளவில் சென்ற ஆயுத நபர்கள் இவர்களைக் கடத்திச் சென்றனர்.

40 அகவையுடைய நவரத்தினம் மஞ்சுளா, உயர்தரப் பரீட்சையில் தோற்றும் அவரது மகனான 18 அகவையுடைய நவரத்தினம் கலைவாணன் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடத்திச் செல்லப்பட்ட வீட்டில் இருந்து 75 மீற்றர் தொலைவில் துணைப்படைக் குழு ஒன்றின் முகாம் அமைந்திருக்கின்றது.

nitharsanam: கல்முனையில் சார்க் அமைப்பின் தலைவரின் அம்பாறை இணைப்பாளரால் தாயும் மகனும் கடத்தல்!!

No comments: