Wednesday 20 August 2008

கொட்டாஞ்சேனையில் காவற்துறை சிப்பாயின் கழுத்து அறுப்பு

கொட்டாஞ்சேனை ஜெம்பட்டா வீதி காவல்துறை சிப்பாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

24 வயதான இந்திக பண்டார என்ற காவற்துறை சிப்பாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

புலிகளுக்கு உதவியதாக நீதிமன்றத்தினால் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருந்த அச்சகம் ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அச்சகத்தின் உரிமையாளர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

No comments: