Tuesday 19 August 2008

வட போர் முனையில் படையினர் மூவர் பலி, 9 பேர் படுகாயம்

யாழ் முகாமாலையில் முன்னரங்கில் நேற்று மாலை 5:30 முதல் அரை மணி நேரத்திற்கு இடம்பெற்ற எறிகணை மோதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு படை உறுப்பினர் பலாலி படைத்துறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் முன்னரங்கில் காலை 8:30 அளவில் இடம்பெற்ற எறிகணை மோதலில் தமது தரப்பில் மூவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று மாலை நாகர்கோவிலில் விடுதலைப் புலிகளின் பொறி வெடிகளில் சிக்கிய படையினரில் 6 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறவித்துள்ளது.

No comments: