Saturday 23 August 2008

கள்ள வாக்கை அளிக்க முயற்சித்த சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார்

sarana.jpgஇரத்தினபுரியில் கள்ள வாக்கை அளிக்க முயற்சித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பாஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை பிரதேச மக்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி கரபிஞ்ச பிரதேசத்தில் உள்ள புனித ஜோக்கின் தமிழ் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியிலேயே அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கம்பாஹாவைச் சேர்ந்த 25 பேருடன் பேரூந்து மற்றும் கெப் வாகனத்தில் சென்ற சரண குணவர்தன, ஜே.வீ.பீனரை போல் சிவப்பு உடைகளை அணிந்திருந்தாகவும்,


பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை அடையாள கண்டப்பின்னர், அங்கிருந்து விரட்டியதுடன் , அவர்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: