Thursday 21 August 2008

மட்டக்களப்பில் ஒருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு வவுணகுளம் கந்தன்குடா பகுதியைச் சேர்ந்த ஒருவரை இனந்தெரியாதோர் சுட்டுப் படுகொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத நபர்கள், கொலையுண்டவரை வெளியே அழைத்து பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அழகுதுரை தர்மலிங்கம் என்ற 48 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments: