Tuesday 19 August 2008

பருத்தித்துறையில் படையினர் இருவர் படுகாயம்

யாழ் பருத்தித்துறையில் இனம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறீலங்கா படைகள் தரப்பில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினைத் தொடர்ந்து, படையினர் அந்தப் பிரதேசங்களில் கடுமையான தேடுதல், மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த படையினர் இருவரும் பலாலி படைத்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வல்லிபுரம் ஆழ்வார் கோவிலுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பற்றிருப்பதாக உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.

No comments: