Wednesday 20 August 2008

நேற்றைய மோதல்களில் நால்வர் பலி, 31 பேர் காயம் - படைத்தரப்பு

விடுதலைப் புலிகளுடனான நேற்றைய மோதல்களில் தமது தரப்பில் நால்வர் கொல்லப்பட்டு, மேலும் 30ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு, மணலாறு, ஆன்டான்குளத்தில் படைத் தரப்பில் ஒருரவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 படையினர் காயமடைந்துள்ளனர்.

மாந்தை கிழக்கில் துணுக்காய், மல்லாவி, மணியகுளம் பகுதியில் மூன்று படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் 23 படையினர் காயமடைந்துள்ளனர்.

யாழ் முகமாலை, வவுனியா பாலமோட்டையில் இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த தகவல்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சே அறிவித்துள்ளது.

நேற்றைய மோதல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

No comments: