Wednesday 20 August 2008

பி.பி.சி செய்தியாளர் T.M.V.P குழுவால் மிரட்டப்பட்டதற்கு கண்டனம்

BBC உலக சேவையில் சிங்கள மொழியிலான சந்தேசிய ஒலிபரப்பின் செய்தியாளர் T.M.V.P துணைப்படைக் குழுவால் மிரப்பட்டதற்கு, கொழும்பை தளமாகக் கொண்ட ஐந்து முக்கிய ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சந்தேசிய ஒலிபரப்பின் பொலநறுவை செய்தியாளர் தக்சிலா ஜெயசேன (Thakshila Jayasena) பொலநறுவையில் தேர்தலில் போட்டியிடும் துணைப்படைக் குழுவின் மங்களம் மாஸ்ரர் என்பவரது அடியாட்களால் நேற்று முன்தினம் மிரட்டப்பட்டிருந்தார்.

பொலநறுவை மன்னம்பிட்டியவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பேரணி பற்றிய செய்தியை சேகரித்துவிட்டு பொலநறுவை நகர் நோக்கிச் சென்றபோது இவர் மிரட்டப்பட்டிருந்தார்.

No comments: