Sunday 17 August 2008

கடத்தப்பட்டவர் சுருக்கிடப்பட்டு படுகொலை

திருகோணமலை - தம்பலகாமம், பாரதிபுரம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை கழுத்தில் சுருக்கிட்டு கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் கடத்தப்பட்ட ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சடலம் மேலதிக மரண பரிசோதனைகளுக்காக கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தம்பலகாமம் பிரதேசத்தில் வசித்த 48 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

No comments: