Friday 1 August 2008

கொழும்பு-கட்டுநாயக்க வீதி நேரத்துக்கு நேரம் மூடப்படும்

சார்க் மாநட்டில் கலந்து கொள்ளும் அரச தலைவர்கள் இன்று இலங்கைக்கு வருகைதருவதை முன்னிட்டு, கொழும்பு-கட்டுநாயக்க வீதி இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை தொடர்ச்சியாக நேரத்துக்கு நேரம் மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை 30 நிமிட நேர இடைவெளிக்கு ஒரு தடவை இந்த வீதி மூடப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, பயணிகள் கொழும்புக்கு வருவதற்கு ஏனைய மாற்றுப் பாதைகளை பயன்படுத்த முடியும் எனவும் இல்லையேல், கொழும்பு-கட்டுநாயக்க வீதி திறக்கப்படுகின்ற நேர இடைவெளிகளில் சிறிது நேரம் காத்துநின்று பயணங்களைத் தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு நகரிலுள்ள வீதிகள் தொடர்ச்சியாக மூடப்படமாட்டாது எனவும், முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் நேரங்களில் மாத்திரம் போக்குவரத்துக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: