Friday 1 August 2008

தந்தையை கொலை செய்த சிவில்பாதுகாப்பு சிப்பாய் கைது

கெப்பிற்றிகொல்லாவ கோனமெரியாவ பிரதேசத்தில் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சிவில் பாதுகாப்பு சிப்பாய் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு 11.50 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர் கெபதிகொல்லாவ சிவில் பாதுகாப்பு படையில் கடமையாற்றி வருகின்றார். இந்தப் படுகொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய துப்பாக்கியையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு கருதி சிவில் பாதுகாப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு படையில் அங்கம் வகிக்கும் பலர் இவ்வாறான சட்டவிலோத சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

1 comment:

Anonymous said...

well its nice to know that you have great hits here.