Sunday 1 June 2008

இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் ஆயுதக்குழுக்களுக்கௌ உதவும் செயற்பாடுகளை கைவிடவேண்டும்-ஐ.நா

இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் குற்றவாளிகளுக்கு உதவும் செயற்பாடுகளை கைவிடவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் விசேச நீதி விசாரணையாளர், பிலிப் அல்ஸ்டன் கோரியுள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி ஜெனீவாவில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

அரசாங்கமும் அதிகாரிகளும் இராணுவத்தினருடனும் ஆயுதக்குழுக்களுடனும் தொடர்புகளை கொண்டிருப்பது குற்றச்செயல்களை ஊக்குவிக்கும் என அல்ஸ்டனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணா குழுவினருடன் தொடர்புகளை கொண்டிருந்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதி நடைமுறையை முழுமையாக மீறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஒத்துழைப்பு காரணமாக கிழக்கிலும் வடக்கிலும் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கம் ஏற்பட்டதாக அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

No comments: