Thursday, 14 August 2008

அராலியில் படையினரின் ரக் வாகன விபத்து: 7 படையினர் காயம்

யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனத்தின் விபத்துக்கு உள்ளாகியதில் சிறிலங்காப் படையினர் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்பாணம் அராலிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அராலி பாலத்திற்கு அண்மையில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனம் வேகமாகச் சென்றபோது ரக் தடம் புரண்டதிலேயே படையினர் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த படையினர் 7 பேரும் பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: