Thursday, 14 August 2008

திருகோணமலை தம்பலகாமத்தில் மினி சூறாவளி 29 வீடுகள் சேதம் மின்சார கம்பங்கள் வீழ்ந்தன மின்சாரம் துண்டிப்பு

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இன்று பிற்பகல் வீசிய மினி சூறாவளியில் 29 வீடுகள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மரங்கள் வீதியோரத்து மின்கம்பங்கள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மின் விநியோகமும் அந்தப் பிரதேசத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்தச் சூறாவளியினால் எவரும் காயப்பட்டதாகவோ உயிரிழந்ததாகவோ தகவல் வெளியாகவில்லை

No comments: