Sunday, 10 August 2008

கடன் அட்டை மோசடி வெள்ளவத்தையில் ஐவர் கைது

கடன் அட்டை மோசடியுடன் தொடர்புடைய 5 பேர் கொழும்பு வெள்ளவத்தை நகரில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தகவலின் ஒன்றின்படி மேற்கொண்ட சோதனையின் போது,

போலி கடன் அட்டைகளை அச்சிடும் கருவி, கணினி, புகைப்பட தொகுப்பு, இரண்டு போலி கடன் அட்டைகள் மற்றும் இரண்டு கார்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார்.

No comments: