Thursday, 14 August 2008

எம்பிலிப்பிட்டியவில் குண்டு வீச்சு நால்வர் காயம்

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டியவில் நேற்று முன்தினம் இடம் பெற்ற குண்டுவீச்சுச் சம்பவத்தில் 4பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய உடவளவ வீதியில் தலகல்ல சந்தியிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைச் சோதனையிட முயன்றவர்கள் மீதே குண்டு வீசப்பட்டது. இதன் போது நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

No comments: