Thursday, 7 August 2008

அலரி மாளிகையை சுற்றி அரை கிலோமீற்றருக்கு உயரமான கட்டிடங்களுக்கு தடை

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை பிரதமர்களின் வாசஸ்தலமும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியிருக்கும் இடமுமான அலரி மாளிகையின் பாதுகாப்புக்கருதி புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக அலரி; மாளிகையை சுற்றி சுமார் அரை கிலோ மீற்றர் தூரத்திற்கு உயரமான கட்டிடங்கள் அமைக்கப்படுவதை தடைசெய்வதென அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

எனினும் இந்த தீhமானம் குறித்து காவல்துறை மா அதிபரைக்கேட்டபோது அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனக்குறிப்பிட்டார்.

அலரி மாளிகையை சுற்றிவர பல உயரமான கட்டிடங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அண்மைகாலமாக இலங்கையிலேயே உயரமான கட்டிமாக அமையும் வண்ணம் 42 மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

No comments: