Sunday, 13 July 2008

வவுனியாவில் முன்நகர்வுத் தாக்குதல் முறியடிப்பு: 7 படையினர் பலி- 15 பேர் படுகாயம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத்தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 15 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் செறிவான எறிகணைத்தாக்குதலை நடத்தியவாறு படையினர் முன்நகர்வுத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இம் முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர்.

இன்று பிற்பகல் 4:30 மணிவரை நடத்தப்பட்ட முறியடிப்புத்தாக்குதலில் படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கினர்.

இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டனர். 15 படையினர் படுகாயமடைந்தனர்.

No comments: