Thursday, 24 July 2008

புலிகளின் தாக்குதல்களில் நான்கு படையினர் பலி- ஒன்பது பேர் காயம்

வியாழக்கிழமை, 24 யூலை 2008

வன்னிக் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் நான்கு சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்ட விவரம்:

மன்னார் புங்கங்தாழ்வுமடுவில் நேற்று பிற்பகல் 2:45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு கல்விளான்குளம் பகுதியில் நேற்று மாலை 3:30 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்குப்பகுதியில் உள்ள கரவெட்டிவேம்புப் பகுதியில் நேற்று நண்பகல் 12:00 மணியளவில் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியா நவ்விப்பகுதியில் நேற்று பிற்பகல் 6:30 மணியளவில் இடம்பெற்ற மோதலில் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியா புதுக்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2:10 மணியளவில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி காயமடைந்துள்ளார்.

மணலாறு கிரிபன்வேவ வடக்கு ஜனகபுர வடக்குப் பகுதிகளில் படையினர் இருவர் நேற்று முற்பகல் 11:20 மணிக்கும் பிற்பகல் 1:00 மணிக்கும் இடையில் மிதிவெடிகளில் சிக்கி காயமடைந்தனர்.

No comments: