Monday, 21 July 2008

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப் பத்திரம் தயாராக இருக்கிறது -டலஸ் அழகப்பெரும தெரிவிக்கிறார்

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாகரனை பிடிக்கும் காலம் நெருங்கியுள்ளதனால் விலைவாசி உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்தினர் வெற்றியடைந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அத்தியாவசியப்பொருட்களின் விலையை காரணங்காட்டி மக்களை தூண்டி விடும் நடவடிக்கையில் எதிர்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் புலிகளை முழுமையாக ஒழிக்கும் காலம் நெருங்கி விட்டது

பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப் பத்திரமும் தயாராக இருக்கிறது, இன்னும் ஆறுமாதமோ ஒருவருடமோ அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றார்.

1 comment:

ttpian said...

let this beggar alaga peruma will kick the bucket soon!
Please remember what happenend to
Jeyaraj fernado pulle?