Saturday, 19 April 2008

கனடா பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும்: கோரிக்கை.


மனித உரிமை மீறல்கள் காரணமாக இலங்கையின் மீது கனடா பொருளாதார தடையை கொண்டுவரவேண்டும் என கனடாவின் கன்ஸவேட்டிவ் கட்சி நிதிச்சேகரிப்பாளர்கள் கோரியுள்ளனர்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை வம்சாவளிகளும் ஒன்றாரியோ சட்டத்தரணிகளும் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கமே பொறுப்பாக உள்ளது.இந்த நிலையில் இலங்கையின் மீது பொருளாதார மற்றும் ராஜதந்திர தடைகளை கொண்டுவருவது தொடர்பாக கனேடிய அரசாங்கம் ஆராயவேண்டும் என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது’சொக் கொன்கெல் என்ற கன்வவேட்டிவ் நிதிச்சேகரிப்பாளரின் கருத்துப்படி இலங்கையி;ன் இனப்பிரச்சினையை தீhப்பதற்கு இதுவே உரிய தருணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

ttpian said...

if canada starts,there are some more nations which will follow the suit!