Saturday, 12 July 2008

விடத்தல் தீவு - வவுனிக்குளம் புவியியல் ரீதியில் ஓர் ஆய்வு

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்ற்றும் நோக்கில் கடந்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்;பட்ட பெயரிடப்படாத நடவடிக்கை தொடர்கிறது. புலிகளுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தியவாறு அவர்கள் வசமுள்ள பகுதிகளைக் கைப்பறுவதே படைகளது நோக்கம்.

1996இல் ஆரம்பிக்கப்பட்ட ஜயசிக்குறு நடவடிக்கை போன்றே தற்போது இடம் பெற்று வரும் படை நடவடிக்கையும் உள்ளது. ஜயசிக்குறு படை நடவடிக்கையின் நோக்கம் வேறு தற்போது நடைபெற்றுவரும் படை நடவடிக்கையின் நோக்கம் வேறு.

ஜயசிக்குறு நடவடிக்கை ஏ-9 வீதியை மையப்படுத்தி வவுனியாவுக்கும் யாழ். குடா நாட்டுக்குமிடையயேயான தரை வழிப்பாதையை திறப்பதையே நோக்கமாகக் கொண்டு முன்டெடுக்கப்படது. இதன் மூலம் ஏ-9 வீதியைக் கைப்பற்றி வன்னியை இரண்டாகப் பிளவுபடுத்தி, வன்னிக்குள் தொடர்பற்ற இரு பகுதிகளுக்குள் புலிகளைப் பலமிழக்கச் செய்து பின் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிகளுக்குள்ளும் புகுந்து அவர்களை அழித்து நிலத்தினைக் கைப்பறுவதே ஜயசிக்குறுவின் நோக்கம்.

இதன் மூலம் ஆனையிறவிலிருந்தும், பூநகரியிலிருந்தும் புறப்பட்ட படைகள் பரந்தன் ஊடாக கிளிநொச்சி வரை நகர்ந்திருந்தன. அதேபோல வவுனியாவிலிருந்து நகர்ந்த படைகள் இரு வருடங்களின் பின் மாங்குளம் வரையும், நெடுங்கேணியூடாக இரகசியமாக நகர்ந்த படைகள் வாவெட்டிமலை ஊடாக ஒட்டிசுட்டான், ஓலுமடு, அம்பகாமம் வரை நகர்ந்திருந்தன.

அதேபோல் மன்னார் களமுனையிலும் ரணகோச ஜயசிக்குறு ஆகிய நடவடிக்கைளினால் பள்ளமடுவுக்கு மேற்காக ஒருமைல் தூரம் வரை நகர்ந்திருந்தனர். அத்துடன் வவுனியாக் களமுளையான மூன்று முறிப்பிலிருந்து நகர்ந்த படைகள் பனங்காமம் வரையும் நகர்ந்திருந்தனர். அன்றைய ஜயசிக்குறு ஏ-9 விதியை மையமாக வைத்து அதனை அண்டிய இருபகுதிகளையும் கைப்பற்றியவாறு நகர்ந்தது.

ஆனால் தற்போது இடம் பெறும் நடவடிக்கைகள் ஏ-9 வீதியை மையப்படுத்தியதாக இருக்கவில்லை வன்னியில் இரு கரையோரங்களiயும மையமாகக் கொண்டதுடன் ஏ-9 வீதிக்குச் சமாந்தரமாக ஏ-32 வீதி மற்றும முல்லைத்தீவு செல்லும் வீதி ஆகியவற்றை மையமாக்க கொண்டது. இது வன்னியை மீளக்கைப்பறுவதுடன் விடுதலைப் புலிகளின் கடல்வழி விநியோகங்களை மூடி கடற்புலிகளைப் பலமிழக்கச் செய்யும் நோக்குடன் கடந்த ஒன்றரை வருடங்களாக இடம் பெறுகிறது.

ஏ-32 வீதியைக் கைப்பற்றுவதன் மூலம் விடுதலைப்புலிகளின் தமிழகத்துக்கான தொடர்பை துண்டித்து விடுவதுடன் யாழ். குடாநாட்டில் நிலை கொண்டிருக்கும் படைகளுக்குhன தரைவழி வழங்கல்கiளையும் மேற்கொள்ள முடியும். அதேபோல தான் முல்லைத்தீவினைக் கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் சர்வதேச தொடர்புகளை துண்டிக்கலாம் என்ற எண்ணத்துடன் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

இனி விடத்தல் தீவு பற்றி பார்க்கலாம். பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் கூறுவதுபோல் விடத்தல் தீவு முக்கித்துவம் வாய்ந்த பகுதியா? என்று நோக்கினால் உண்மையில் இல்லை என்றே சொல்லலாம். விடத்தல்தீவுனுடைய அமைவிடத்தை நோக்குவோமானால் மன்னாரிலிருந்து கிட்டத்தட்ட 16 மைல தொலைவில் விடத்தல்தீவு அமைந்திருக்கிறன்றது. பள்ளமடுச் சந்தியிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள விடத்;தல் தீவுக் கடற்பரப்பு மிக ஆழம் குறைந்ததாகவே உள்ளது. அது சேற்றுக்கடலாகவே விளங்குகின்றது. பெரிய படகுகள் விடத்தல் தீவின் இறங்கு துறைக்குள் நுழைய முடிhயாது. ஏனேனில் அது ஓர் வற்றுப் பெருக்கும் கடல். இறங்கு துறையிலிருந்து கடலைப்பார்க்க முடியாது காரணம் கடலினுள் கண்டல் மரங்களும் ஏனைய கடல்தாவரங்களும் உயர்ந்து வளர்ந்திருப்தானால் கடலைப் பார்க்க முடியாது.

அதிகாலையில் கடல் நீரில் மிதக்கின்ற படகுகள் மாலையில் அதேயிடத்தில் மணற்றிடலில் சரிந்து கிடப்பதனை காணமுடியும். இக்கடல் வற்றுப் பெருக்குக் கடல் என்பதால் தான் இது நிகழ்கிறது. அத்துடன் மன்னார்க் கடலில் இருந்து விடத்தல்தீவு இறங்குதுறைக்கு வருவதானால் அருனோல்டா கால்வாய் ஊடாகவே வரமுடியும். ஏனைய கடற்பகுதிகளால் வரமுடியாது. (1940 களில் அருனோல்டா என்கின்ற மன்னர்ர் அரசாங்க அதிபரின் அனுசரனையுடன் இங்கு படகுகள் சென்று வரும் பொருட்டு இக்கால்வாய் வெட்டப்பட்டது)

மேற்குறிப்பட்ட தன்மையுடைய கடற்பகுதியில் கடற்புலிகளின்; பெரியளவிலான விநியோ நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது கடினம். வித்தல்தீவு இறங்குதுறையைக் காட்டிலும் பல சாதகத்தன்கைகளை கொண்ட இறங்குதுறை மன்னார் - பூநசரி கடற்பகுதியில் நிறையவே உள்னன. மேலும் விடத்தல்தீவு மூன்று பக்கம் சதுப்பு நிலமும் மற்றைய பக்கம் வற்றுப் பெருக்குக் கடலையும் உடைய தன்மையைக் கொண்டது.

விடத்தல்தீவவுக்கான ஒரே ஒரு விநியோகப் பாதையான பள்ளமடுச் சந்தியிலிருந்து செல்லும் ஒருமைல் நீளமான பாதையே உள்ளது. இவ்வீதி சதுப்பு நிலங்களை ஊடறுத்தே செல்கின்றது. அத்துடன் விடத்தல் தீவு அதிமுக்கியமான பகுதியாக இருந்திருந்தால் 1987 இல் அரச படைகள் இந்த விடத்தல் தீவிலேயே முகாமமைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. பள்ளமடுச் சந்தியிலேயே இராணுவ முகாமை அமைத்தனர் ஏனேனில் பள்ளமடுச் சந்தியில் முகாம் அமைத்தால் விடத்தல் தீவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனை கருத்தில் கொண்டே அங்கு முகாம் அமைத்தனா.

ரணகோச நடவடிக்கை மூலம் நகர்ந்த படையகள் பள்ளமடுச் சந்திக்குத் தெற்கே இரண்டு மைல் தொலைவில் நிலைகொண்டதுடன் அதற்குமேல் முன்னேற முடியாமல் தவித்தன. தற்போதும் கூட ரணகோச நடவடிக்கைப் படைகள் நின்ற இடத்திலேயே நிற்கின்றன.

இனிமேல் மன்னாரில் இராhணுவ நகர்வென்பதும் பள்ளமடு யுத்தம் என்பதும் பாலைவனத்திற்கு ஒப்பானது. திருக்கேதிஸ்வரத்திலிருந்து பள்ளமடு நோக்கி நகர்ந்தாலும் பெரியமடுவிலிருந்து பள்ளமடு நோக்கி நகர்ந்தாலும் வரும் களமுனை வெட்வெளிகளைக் கொண்டது. ஒரு வெட்டவெளி யுத்தத்தை ஒரு போதும் வலிந்த தாக்குதல் தரப்பு விரும்பப் போவதில்லை. அதனால் தான் பாலம்பிட்டியிலிருந்து காடுகளினூடாக சிறாட்டிக்குளம் சென்ற படைகள் மேற்கு நோக்கி திரும்பி கூராய் கள்ளியடி வீதியில் கூராய் வரை சென்றிருக்கின்றன. கூராயிலிருந்து மேற்கு நோக்கி நகர்வதன் மூலம் படைகள் கூராய், கள்ளியடி என்பனவற்றைக் கைப்பற்றி விடத்தல்தீவை இலகுவாகச் சென்றடையலாம். இதே போன்றே ரணகோசப்படைகளும் ஆத்திமோட்டை ஊடாகக் கள்ளியடி நோக்கி நகர முற்பட்டன.

அப்போது ஆத்திமோட்டை கூராய் சதுப்பு நிலப்பகுதியில் நடந்த சண்டைதான் விடத்தல் தீவு ரணகோசப் படை நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரும் நிலைக்குத் தள்ளியது. இனிவரும் வாரங்களில் இராணுவம் விடத்தல்தீவை கைப்பறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு மேற்கொள்ளும் போதுதான் அதன் பலாபலன்களை உணரமுடியும்.

இதேபோல் சிறாட்டிக் குளம் மற்றும நட்டாங்கண்டல் வரை நகாந்த படையினர் பாண்டியன் குளம் ஊடாக வவுனிக்குளம் வரை நகர முற்படலாம். ஏனெனில் வன்னியின் மையப்பகுதியில் உள்ள வவுனிக்குளம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். பனங்காமத்திலிருந்து ஆறுமைல் தொலைவில் உள்ள வவுனிக்குளம் பகுதியைக் கைப்பற்றி விட்டால் மாங்குளம் நோக்கி நகர்வது இலகு. அத்துடன் வவுனிக்குளம் படைகளின் வசம் வந்துவிட்டால மல்லாவி, மற்றும் துணுக்காய் ஆகியன இலகுவாகவே படைகள் வசமாகும்.

வவுனிக்குளம் வரை நகர்ந்துவிட்டால் வவுனிக்குளத்தின் நீரேந்தும் பகுதியூடாக பாலைப்பாணி வரை சென்று விடுதலைப் புலிகளின் மூன்று முறிப்பு - வன்னிவிளாங்குளம் பாதையை பாலைப்பாணியில் ஊடறுப்பதன் மூலம் புலிகளின் மூன்று முறிப்புக்கான வழங்கல்களைக் கட்டுப்படுத்தி அவர்களைப் பின்நகர்த்தலாம்;. மூன்று முறிப்பனூடாக பனங்காமம் நட்டாங்கண்டல், சிறாட்டிக்குளம், வவுனிக்குளம் என்பவற்றுக்கான இராணுவ வழங்களை செப்னிட முடியும். எனவே வவுனிக் குளம் வரை நகர்வை மேற்கொள்ளக் கூடும். ஜயசிக்குறு படைகள் வவுனிக்:குளத்தின் வால் கட்டுப் பகுதியான அதாவது மேலதிக நீர் வெளியேற்றப்படும் பகுதியனா கிடாய்ப் பிடித்த குளம் வரை நகர்ந்து மேற்கொண்டு நகர முடியாது தவித்தன. அதற்கு வவுனிக்குளத்தின் புவியியல் அமைப்பே கராணம் இன்னும் மூன்று மாதங்கள் கடந்து விட்டால் மழைக்காலம் வந்துவிடும். மழைக்காலம் வந்தால் பனங்காமம் - வவுனிக்குளம் ஆகிய பகுதிகளை ஊடறுத்து ஓடும் பறங்கி ஆறு, பாலியாறு, மற்றும் உப்பன் ஆறு, ஆகிய பெரிய ஆறுகள் நீர் நிரம்பி ஓடும். பெரும்பாலும் இவ்வாறுகளில் நீர் நிரம்பி ஓடும்போது அதன் இருமருங்கிலுமுள்ள சில பிரதேசங்களை தன்னுள் அடக்கயே ஓடும்.

அதன்போது பிரதேசங்களுக்கிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்படும் உதாரணமாக பாலியாறு பாய்ந்தோடுகின்ற போது பாண்டியன் குளத்திற்கும், வவுனிக்குளத்திற்குமான தொடர்பு சில வாரங்களுக்கு துண்டிக்கப்படடிருக்கும். படைகள் இப்பிரதேசங்களில் நகர்ந்திருக்கும் போது அவ்hவறு துண்டிக்கபட்டால் அது படையினருக்கு பாதகமாகலாம்.

வவுனிக்குளப் பிரதேசம் யார் கையில் உள்ளதோ அவர்ளின் கையே இப்பகுதியில் என்றும் ஓங்கும். எனவே இப்பிரதேசங்களை குறிவைத்து அடுத்தடுத்த வாரங்களில் இருதரப்பும் காய்களை நகர்த்தக்கூடும்.

ஆக்கம் :அ.வன்னியன்.லண்டன்

நன்றி வீரகேசரி வாரவெளியீடு

No comments: