Friday, 11 July 2008

மட்டக்களப்பு திராய்மடுவில் ஒருவர் கடத்தல்

மட்டக்களப்பு சின்ன ஊரணி பாரதி கிராமத்தைச்சேர்ந்த 34 அகவையுடைய சுந்தரநாதன் செல்வகுமார் என்ற குடும்பஸ்தர் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் திராய்மடுக் கிராமத்தில் வைத்து இராணுவ வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உறவினர் ஒருவரை சந்திக்க திராய்மடுக்கிரமாத்திற்கு சென்ற


இவரை பின்தொடர்ந்து வந்த இராணுவ வாகனம் ஒன்றில் வந்த குழு ஒன்றினாலேயே இவர் கடத்தப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில்க்கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: