உக்கிரமடைந்துள்ளன. இலங்கை விமானபடைக்கு சொந்தமான பீச் கிராப்ட் என்ற உளவு விமானம் கடந்த மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு வன்பரப்பில் பறந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தின் பணியானது எதிரியின் நிலப்பரப்பை தேடுவதாகும். இதற்கான தொழிநுட்ப கருவிகள் இந்த உளவு விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விமானம் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் விமானி, இரனைமடு குளதத்திற்கு மேலாக பயணித்து கொண்டிருந்த போது முல்லைத்தீவு காட்டு பகுதியில் பாரிய வெளிச்சம் ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். விமானி கண்டது கெரில்லாக்களின் விமான ஓடுதளமாகும். யாழ் கண்டி ஏ 9 வீதியில் இரணைமடு குளத்திற்கும் கல்மடுகுளத்திற்கும் இடையில் அமைக்கப்பட்டிருந்த இந்த ஓடுதளத்தின் நீளம் ஆயிரத்து 200 மீற்றர்களாகும். கெரில்லாக்களின் ஈழம் விமானபடையின் இலகு ரக விமானங்களை மேலெழும்ப இந்த ஓடுதளத்தையே கெரில்லாக்கள் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுரம் விமான முகாம் மீதே கெரில்லாக்கள் தமது விமானங்களை பயன்படுத்தி இறுதியாக தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கெரில்லாக்களின் விமானங்கள் தொடர்பில் எதுவும் தெரியவரவில்லை. இதனால் இரணைமடு ஓடுதள பகுதியில் காணப்பட்ட பாரிய வெளிச்சம் ஆபத்துக்கான முன்னறிவிப்பாக விமானிகள் அறி;ந்து கொண்டனர். விமானத்தை பறக்கவிட அல்லது தரையிறக்கவே ஒடுதளப்பகுதியில் ஒளியேற்றப்பட்டிருக்காலம் என கருதப்படுகிறது. இரணைமடு காட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து உளவு விமானத்தின் விமானி விமானபடையின் தலைமையகத்திற்கு அறிவிததார். இதனையடுத்து இரணைமடுவில் உள்ள புலிகளின் ஓடுதளம் மீது தாக்குதல் நடத்துமாறு கட்டுநாயக்க விமானப்படையினருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான தளத்தில் இருந்து புறப்பட்ட தாக்குதல் ஜெட் விமானங்கள் புலிகளின் ஒடுதளம் மீது குண்டுகளை போட்டனர். இதன்பின்னர் ஒடுதளத்தின் மின் ஒளி மறைந்து போனது. தமது தாக்குதலில் புலிகளின் ஒடுதளத்திற்கு சேதம் ஏற்பட்டதாக விமான படையினர் தெரிவித்து;ளளனர். இது புலிகளின் இரணைமடு ஒடுதளத்தின் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் அல்ல. இந்த ஒடுதளம் குறித்து விமானியற்ற உளவு விமானம் மூலம் கடந்த 2003ஆம் ஆண்டு விமானபடையினர் அறிந்துகொண்டனர். கெரில்லாக்கள் விமான ஒடுதளம் ஒன்றை அமைப்பது, போர் நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் என அரசாங்கம் கண்காணிப்பு குழுவிற்கு அறிவித்திருந்தது. எனினும் இந்த அறிவிப்பின் மூலம் எந்த பலனும் ஏற்படவில்லை. போர் நிறுத்த உடன்படிக்கை புனித ஆவணம் என கருதி அதற்கு பூஜை வழிபாடுகளை செய்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் கெரில்லாக்கள் எந்த வகையிலான அச்சுறுத்தல்களை மேற்கொண்டாலும் அதனை பொறுத்துகொண்டு பதில் தாக்குதல்களை நடத்துவதில் இருந்து விலகி நின்றது. எனினும் மகிந்த ராஜபக்ஸ அதிகாரத்திற்கு வந்த பின்னர்; ஒரு வருடத்திற்கும் குறைந்த காலத்தில் இவை அனைத்தும் தலைகீழாக மாறின.முதலில் பொறுத்து கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. இராணுவ தளபதியின் கொலை முயற்சியை அடுத்து பொறுமையிழந்தார். தான் பிரபாகரன் முன்னிலையில் மண்டியிட தயாரில்லை என ஜனாதிபதி அடிக்கடி கூறும்வார்த்தையாகி போனது. இதன் அர்த்தமானது 4ஆம் கட்ட ஈழ போர் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதாகும். இந்த இறுதி கட்டமானது பிரபாகரன் தலைமையிலான கெரில்லாக்களை கூண்டோடு அழிப்பதாகும். இல்லை எனில் ஆயுதங்களை கைவிட்டு கெரில்லாக்கள் சரணடைவதாகும். எனினும் ஆயுதங்களை கைவிட்டு பிரபாகரன் சரணடைவார் என நினைப்பது, நகைப்புக்குரியது. இதனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முப்படைத்தளபதி என்ற வகையில் அவரின் இலக்கானது, கெரில்லாக்களை போருக்கு இழுத்து அவர்களை கொலை செய்வதாகும். இதற்காக நான்கு முனைகளில் புலிகளின் இதயத்தை நோக்கி, செல்லும் படையணிகளின் வேகம் கடந்த இரண்டு வாரங்கள் பெய்த கடும் மழை காரணமாக மந்த நிலையில் காணப்பட்டது. இந்த தொடர் மழைக்காரணமாக பாதிக்கப்படடது மன்னார் மற்றும் மடு களமுனையில் உள்ள படையினரே. வன்னியின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் இந்த நிலப்பரப்பு மழைக்காரணமாக நிலங்கள் நீரில் மூழ்கி நீர்த்தேக்கமாக காட்சியளித்தது. நீரில் நிரம்பிய இந்த நிலப்பரப்பின் ஊடாக முன்னேறிச் செல்வது படையினருக்கு மிக கடினமானதும் ஆபத்தான சவாலாகவும் இருந்தது. மழைக்காரணமாக புதைக்கப்பட்டிருந்த நிலக்கணிகள் மேலே வர தொடங்கியமையே இதற்கான காரணமாகும். இந்த நிலைமையில் பிரிகேடியர் சிந்தர சில்வா கட்டளை பிறப்பிக்கும் 58வது படைப்பிரிவினர் கீழ் உள்ள 12 வது கஜபா படைப்பிரிவின் படையினர் கடந்த இரண்டாம் திகதி கெரில்லாக்களின் பலமிக்க பதுங்குகுழிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த பதுங்கு குழிகள் கட்டுக்கரை குளத்திற்கு வடக்கில் அமைந்துள்ள கள்ள அடைச்சான் பிரதேசத்தில் அமைந்திருந்தன. இந்த தாக்குதலில் 13 கெரில்லாக்கள் கொல்லப்பட்டும் 43 பேர் காயடைந்தனர் எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 58வது படையணிகள் கட்டுக்கரை குளம் மற்றும் மன்னார் இடையிலான பிரதேசத்திலேயே போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கள்ளஅடைச்சான் பிரதேசத்தை 58வது படையணிகள் கைப்பற்றியுள்ள நிலையில் கட்டுக்கரை குளம் மற்றும் மடு இடையிலான நிலப்பரப்பிற்குள் படையினருக்கு இலகுவாக பிரவேசிக்க முடியும். வன்னி போர் கள நிலவரங்கள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில் சிரேஸ்ட படையதிகாரிகளில் கவனம் மீண்டும் கிழக்கு மாகாணத்தை நோக்கி திரும்பியுள்ளது. கிழக்கு மாகாண சபை தேர்தலே இதற்கான காரணமாகும். இந்த தேர்தலை விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர். அவர்களின் கனவானது வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஈழ ராஜ்ஜியமாகும். வடக்கில் இருந்து கிழக்கை பிரித்து தேர்தல் நடத்துவது என்பது கெரில்லாக்களின் கனவை கலைப்பதாகும். இதனால் கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்குமாறு கெரில்லாக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அறிவித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அறிவிப்பை அப்படியே கடைபிடித்துள்ளனர். இதன் காரணமாக கிழக்கு மாகாண தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையேதான் முக்கிய போட்டி நிலவுகிறது. மாகாண சபை தேர்தலில் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதன் மூலம் இந்த போட்டி உறுதியாகிறது. ரவூப் ஹக்கீம், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஹசன் அலி, பசீர் சேகுதாவுத், பிள்ளையான் ஆகியோர் போட்டியிடுபவர்களில் முக்கியமானவர்களாவர். இவர்களுக்கு மாத்திரம் அல்ல மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரனுக்கும் புலிகளால் அதிக அச்சுறுத்தல் ஏற்படலாம் என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவிததார். ஏற்கனவே வடக்கில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டானி யாழ்ப்பாணமாநகர சபையை கைப்பற்றியது. கெரில்லாக்கள் அந்த தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததானால் முதல்வர் பதவியில் அமாந்த சரோஜினி யோகேஸ்வரன் மற்றும் சிவபாலன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனா. கெரில்லாக்கள் தற்போது கிழக்கிலும் எதிரணி அரசியல்வாதிகளை கொலைசெய்வதற்கான சகுணத்தை பார்த்தவண்ணமுள்ளதாக அந்த பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டார்.இந்த அச்சுறுத்தல் கிழக்கின் அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல, கிழக்கு மாகாண தேர்தலில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தென்பகுதி அரசியல்வாதிகளையும் கெரில்லாக்கள் குறிவைத்துள்ளதாக இராணுவ புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் முக்கிய புள்ளிகளை கொலை செய்யும் நோக்கில் 4 தற்கொலை குண்டுதாரிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக புலனாய்வு பிரிவினருக்கு அறியகிடைத்திருந்தது. வன்னி நகர்வுகளை திசை திருப்ப தெற்கில் அழுத்தங்களை ஏற்படுத்துவதே கெரில்லாக்களின் வழிமுறையாக உள்ளது. இதற்காக கெரில்லாக்கள் பேரூந்தில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.அச்சுறுத்தல் உள்ள கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஒரு போதும் யுத்தம் நடைபெறாத யால வனபகுதியில் போர் களம் ஒன்றை ஏற்படுத்தினர். இதனை போலவே கெரில்லாக்கள் வில்பத்து வனபகுதியிலும் போர் களத்தினை ஏற்படுத்தி வருவதாக ஏற்கனவே எமது கட்டுரைகள் மூலம் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தோம். வில்பத்து வன எல்லையில் அமைந்துள்ள நொச்சியாகம, கலேயாய கிராமத்தில் ஒரே குடும்பத்தை சோந்த இரண்டு பேர் கடந்த 2ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டனர். கிராமத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குளத்;திற்கு குளிக்க சென்ற தந்தை,தாய், மற்றும் மகன் ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டனா. வில்பத்து வன எல்லையில் அமைந்துள்ள பாதுகாப்பு அரண்களில் இருந்து 800 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பாதுகாப்பு அரண்களில் பாதுகாப்பு கடமைகளில் சிவில் பாதுகாப்பு படையினரே ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு அரண்களை கடந்த மின்கலேயாய குளத்திற்கு நீராடச் சென்றனர். இவர்களில் பெண்ணொருவர் மாத்திரம் திரும்பி வந்தார், திரும்பி வந்த அவர் 30 பேர் அடங்கிய ஆயுத குழுவினர் தமது கணவiனையும் மகனையும் சுட்டுக்கொன்றதாக கூறி பாதுகாப்பு அதிகாரிகளிடம் அழுது புலம்பினார். மேலதி படையினர் வில்பத்து வன பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டனர் எனினும் தேடுதல் நடத்தபடும் முன்னரே கெரில்லாக்கள் அங்கிருந்து சென்று விட்டனர். வில்பத்துவில் செயற்படும் கெரில்லாக்கள் மன்னாரில் இருந்து சென்றுள்ளவர்கள் என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். அவர்களின் நோக்கம் தெளிவாக புரிகிறது.அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ள கிராமங்களை பாதுகாக்க கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எனினும் நடு காட்டில ஏற்படும் சம்பவங்களை தடுப்பது சிரமமான காரியம் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். யால, வில்பத்து வன எல்லை கிராமங்களை போல் கெப்படிகொல்லேவ பிரதேசத்திலும் கெரில்லாக்களில் அச்சுறுத்தல்கள் அதிகாரித்துள்ளதாக இராணுவ புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் முல்லைத்தீவு நோக்கிய படைநகர்வாகும், கெப்பிடிகொல்லேவ பகுதியின் பாதுகாப்பு தற்போது அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதுகாப்பு சபையில் பேசப்படும் விடயங்கள் பத்திரிகைகளில் வெளிவருவது குறித்து விசாரணைகளை நடத்துமாறு உயர் மட்ட உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சபையின் தகவல்கள் வெளியில் செல்வது பாரிய பிரச்சினை என்பதால் அந்த தகவல்களை வெளியிடுவோர் யார் என்தை அறிய விசேட புலனாய்வு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில் ஒழுக்காற்று நடவவடிக்கையில் கிழக்கு மாகாண கட்டளை அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பராக்கிரம பண்ணிப்பிட்டியவை கடந்த 12ஆம் திகதி கூட்டுப்படை தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் நிஸாங்க விஜேசிங்க தனது அலுவலகத்திற்கு அழைததிருந்தார். உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தெளிப்படுத்தவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். இராணுவ தளபதியினால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக பண்ணிப்பிட்டிய உயர்நீதிமன்றத்தல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், தனக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கூட்டுபடை தலைமை அதிகாரியில் அலுவலகத்;திற்கு அழைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பராக்கிரம பண்ணிப்பிட்டியவிடம் அவர் கோரியிருந்த ஆடம்பர வாகனத்தை வழங்குவது இராணுவத்திற்கு சிரமான காரியம் எனவும் படை நடவடிக்கைகள் இடம்பெறும் பிரதேசங்களில் மோட்டார் உந்துருளிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தனக்கு கூட பெரியளவில் மோட்டார் உந்துருளிகள் ஒதுக்கப்படவில்லை என கூட்டுப்படை தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். உயர் மட்ட உத்தரவின் பேரில் பாதுகாப்பு வாகனம், டபிள்கேப் வாகனம், ஹைஎஸ் ரக சிற்றூர்ந்து என்பன பராகிரம பண்ணிப்பிட்டியவிற்கு வழங்கப்பட்டன. கொழும்பில் உள்ள மேஜர் ஜெனரல் பதவி வகிக்கும் ஒருவருக்கு வழங்கப்படும் வாகனங்களைவிட இது அதிகமானதாகும். பண்ணிப்பிட்டியவிற்கு 10 பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டனர், இவர்களில் எட்டு பேர் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கற்கை நெறியை பூர்த்தி செய்யவில்லை என்ற காரணத்தினால் திருப்பி அனுப்பபட்டுள்ளனர். இராணுவ உயர் அதிகாரிகள் எவருக்கும் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படவில்லை என இராணுவம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. படை நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிகளிலும் வாகனங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இராணுவததினர் சுட்டிக்காட்டினார். தற்போது பண்ணிப்பிட்டிய பயன்படுத்தும் டபிள்கெப் வாகனத்தை தேவையேற்படின் திருத்தி அமைத்து கொள்ளட்டும் எனவும் இராணுவம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இரண்டு தரப்பினரின் வாதங்களை அவதானித்த நீதியரசர் பண்ணிப்பிட்டியவின் பாதுகாவலர்கள எட்டாக குறைக்க உத்தரவிட்டதுடன் இவர்களில் இருவரை தமக்கு விரும்பியபடி தெரிவுசெய்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் தற்போது பயன்படுத்தப்படும் ஹையஸ் சிற்றூர்ந்துக்கு பதிலாக ஜீப் வண்டி ஒன்றையும் இரண்டு மோட்டார் உந்துருளிகளை வழங்க முடியுமா என்பது குறித்து இராணுவம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
Sunday, 6 April 2008
கடும் மழைக்கு மத்தியில் வன்னியில் போர் முனைப்புகள்.லக்பிம
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment