Sunday, 6 April 2008

பெங்களூரு விமான நிலைய ஓடுபாதையில் புகுந்த பறவையால் பரபரப்பு

பெங்களூரு விமான நிலைய ஓடுபாதையில் பறவை ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு விமான நிலையத்துக்கு இன்று காலை கோவையில் இருந்து ஜெட் விமானம் வந்தது. அந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் ஒரு பறவை விமான நிலைய ஓடுபாதையில் புகுந்தது. இதானால் விமானம் தரையிறங்காமல் வானில் பறந்து கொண்டிருந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பறவையை ஓடி ஓடி விரட்டினார்கள். பறவை பறந்து சென்ற பின்னர் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த கோவை ஜெட் விமானம் தரையிறங்கியது. ஓடுதளத்தில் பறவை புகுந்ததால் மேலும் சில விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்த சம்பவத்தால் பெங்களூரு விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

1 comment:

பினாத்தல் சுரேஷ் said...

தமிழ்நாட்டுப் பறவையா இருந்துரப்போவுது! தெரிஞ்சா பெரும் பிரச்சினையாயிரும்.