வடக்கு கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி மற்றும் புனர்நிர்மாண அமைப்பின் (நிகொட்) அதிகாரி ஒருவர் அம்பாறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான மகேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது இவரை வழிமறித்த இனம் தெரியாத ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டு விட்டு உந்துருளியில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment