Sunday 6 April 2008

கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்து பிள்ளை அவர்களது பதவிக்கு பண்டுல விஜேசேகர

கம்பக மாவட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்து பிள்ளை அவர்களது இடத்தை நிரப்புவதற்கு அவருக்கு அடுத்தபடியாக 48'078 வாக்குகளை பெற்ற கனேபொல ஆரச்சிகே பண்டுல பெரேரா விஜேசேகர நியமிக்கப்பட உள்ளார்.

அதே சமயம் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்து பிள்ளை அவர்களது பூதவுடல் இறுதி மரியாதைக்காக நாளை (7) காலை 7.00 மணி முதல் பாராளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் கட்டானை பிரேதசத்தின் கொச்சிக்கடை , மணச்சேனையில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இறுதி நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரமுகர்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தின் பின்னரே அறிவிக்கப்படும்.

No comments: