Tuesday 8 April 2008

தான் ஒரு குஸ்ட ரோகி அல்ல-ஜே.வி.பியின் முன்னாள் பிரசார செயலாளர் விமல் வீரவன்ஸ

jvp-mpsglobaltamilnewscom.gifதான் ஒரு குஸ்ட ரோகி அல்ல. தன்னிடம் தற்போது பதவிகள் இல்லை என ஜே.வி.பியின் முன்னாள் பிரசார செயலாளர் விமல் வீரவன்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார். தனக்கு தெரியாமல் கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் எவருடைய தேவைக்காக தன்னை கட்சியில் இருந்து நீக்கினர் என விமல் வீரவன்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட உரை ஒன்றை நிகழ்த்தும் போது ஜே.வி.பியை பாதுகாத்து கொள்ளுமாறு கிராம மட்ட உறுப்பினர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். தனது குரலை ஒடுக்கும் சூழ்;ச்சியின் பின்னனியில் ஐக்கிய தேசிய கட்சியினரும், சர்வதேச தரகர்களும் உள்ளனர். வரலாறு உண்மையான சூழ்ச்சிகாரர்களை ஒரு நாள் வெளிப்படுத்தும் எனவும் தான் ஒருபோதும் கட்சி எதிராக அரசியல் செய்ய போவதில்லை எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.


இதேவேளை ஜேவீபீயின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்சவுடன் இணைந்து பாராளுமன்றில் தனித்து இயங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். 39 நாடாளுமன்ற உறுப்பிர்களில் ஏற்கனவே பிரிந்த நந்தன குணத்திலகவுடன் 13 நாடாளுமன்ற உறுபிபனர்கள் இரும்புக் கட்சி என வர்ணிக்கப்பட்ட ஜே.வீ.பீ.யில் இருந்து பிரிந்துள்ளனர்.

No comments: