Monday, 21 April 2008

மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவுக்கும் புளொட்டுக்கும் இடையில் மட்டக்களப்பில் மோதல்

மட்டக்களப்பு காத்தான்குடி தாளங்குடாவில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஐந்து புளொட் உறுப்பினர்கள் படுகாயமடைந்தனர்.

பிள்ளையான் குழுவினரின் தாக்குதலிலேயே இவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தரப்புக்கும் இடையில் கிழக்கு மாகாணசபைத்தேர்தல் பிரசாரத்தின் போதே மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பில் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடிக்கு பிரசாரத்திற்காக சென்று திரும்பிக்கொண்டிருந்த புளொட் உறுப்பினர்கள் மீதே பிள்ளையான் குழு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கட் மட்டை மற்றும் விக்கட் கம்புகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

3 comments:

Anonymous said...

PLOTE is not a democratic party. It murdered "Tharaki" with the backing of Indian and SL terrorists. Pillaiyan group show much maturity than PLOTE roughes.

Anonymous said...

PLOTE is not a democratic party. It murdered "Tharaki" with the backing of Indian and SL terrorists. Pillaiyan group show much maturity than PLOTE roughes.

Anonymous said...

AAA