Sunday, 6 April 2008

இ‌ந்‌தியா அணை கட்டுவதை எதிர்த்து பாக்.நீதிமன்றத்தில் வழக்கு

இ‌ந்‌திய- பா‌கி‌ஸ்தா‌ன் எ‌ல்லை‌யி‌ல் உ‌ள்ள ஆறுக‌ளி‌ன் குறு‌க்கே இ‌ந்‌தியா அணை கட்டுவதை எதிர்த்து பாகிஸ்தான் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌‌த் தொடர‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌திய- பா‌கி‌ஸ்தா‌ன் எ‌ல்லை‌யி‌ல் உள்ள ப‌க்‌லிஹா‌ர், ‌கிஷா‌ன் க‌ங்கா உ‌ள்ப‌ட 62 இடங்களில் அணைகளை‌க் க‌‌ட்டுவத‌ற்கு இ‌ந்‌திய அரசு ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்து, அவ‌ற்‌றி‌ல் ‌சிலவ‌ற்‌‌றி‌ன் ப‌ணிக‌ள் தொடங்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் , இதனை எ‌தி‌ர்‌த்து இ‌ஸ்லாமாபா‌த் உ‌ய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌க்பா‌ல் எ‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல்கூறியிருப்பதாவ்து :

ஜூல‌ம், சேனா‌ப் ஆ‌கிய ந‌திக‌ளின் 80 ‌சதவீத ‌நீரை இ‌ந்‌தியா பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளும் என்பதால் பா‌கி‌ஸ்தா‌னி‌ல் கடுமையான குடி‌நீ‌ர் ‌த‌ட்டு‌ப்பாடு ஏ‌ற்படு‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌ன் அணை‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள் இ‌ண்ட‌ஸ் பாசன‌ உட‌ன்பா‌ட்டி‌ற்கு மு‌ற்‌றிலு‌ம் எ‌திரானது.இ‌து விஷயத்தில் உ‌ரிமை‌க் குர‌ல் எழு‌ப்ப பாகிஸ்தானின் ஒ‌வ்வொரு குடிமக‌னி‌ற்கு‌ம் ச‌ட்ட‌‌ப்படி உ‌ரிமை உ‌‌ள்ளது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இ‌ம்மனுவை ‌விசா‌ரி‌த்த இ‌ஸ்லாமாபா‌த் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இ‌ந்‌‌தியா அணைகளை‌க் க‌ட்டுவதா‌ல் பா‌கி‌ஸ்தா‌னி‌ல் குடி‌நீ‌ர்‌த் த‌ட்டு‌ப்பாடு ஏ‌ற்படுமா எ‌ன்பதை ஆ‌ய்வு செ‌ய்து, ‌வி‌ரிவான அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்யுமாறு அ‌ந்நா‌ட்டு அமை‌ச்சரவை‌ச் செயலரு‌க்கு உ‌த்தர‌வி‌ட்டது.

No comments: