Wednesday 14 May 2008

மன்னாரில் இருவரைக் காணவில்லை

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இரு குடும்பஸ்தர்கள் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புக்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முருங்கன்பிட்டி பள்ளக்கமம் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய செபஸ்ரியான் சவுரி எனும் தமிழ் குடும்பஸ்தரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆ.யு.சிராயுதீன் எனும் 52 வயதான முஸ்லீம் குடும்பஸ்தர் ஒருவருமே காணாமல் போயுள்ளனர். இவர்கள் காணாமல் போனமை தொடர்பாக மன்னார் சகவாழ்வு மன்றம், மற்றும் பிரஜைகள் குழுவில் நேற்றையதினம் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கால்நடைகளைத் தேடி துவிச்சக்கர வண்டியில் இம்மாதம் 7ஆம் திகதி சென்றவர்களே இவ்வாறு காணாமல்போயிருப்பதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: