விடுதலை புலிகளின் சிறப்பு படையணிகளில் ஒன்றான ஜெயந்தன் படையணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து,அப்படையணியின் மட்டகளப்பு மாவட்ட சிறப்பு தளபதி கீர்த்தி,புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதை, விடுதலை புலிகள் தமது ஊடக செய்திகள் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.
ஜெயந்தன் படையணியின் படைதளத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற அப்படையணியின் 16 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உறயாற்றியபோதே கீர்த்தி இந்த புதிய செய்தியை இலங்கை அரசுக்கு மறைமுகமாக சொல்லியுள்ளதை அவர்களது ஊடகங்கள் அறிவித்துள்ளன.கீர்த்தியின் புதிய செய்தி வருமாறு: ஜெயந்தன் படையணி அடுத்து என்ன செய்யபோகிறது?
ஜெயந்தன் படையணி இன்னும் களமிறங்கவில்லையா? என்ற கேள்விகள் தற்போது தமிழ் மக்கள் எல்லோரிடமும் உண்டு.இலங்கை அரசு கிழக்கில் துணை குழுவினரை வைத்து ஒரு பித்தலாட்ட ஆட்சியை நடத்திகொண்டிருக்கிறது.பிள்ளையான் எனும் விளக்கமில்லாத துணைகுழுவை வைத்து இலங்கை அரசு தமிழ் மக்களையும், அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றிவருகிறது.இதற்கு நாம் விரைவில் பதிலடி கொடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.
Tuesday, 6 May 2008
கிழக்கு மக்களுக்கு புலிகள் புதிய செய்தி!!!
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
Pillayan&company will find "BERTH"
Post a Comment