Wednesday, 21 May 2008

வடமத்திய, தெற்கு மாகாணசபைகளை உரிய காலத்துக்கு முன் கலைத்து போலி தேர்தலொன்றை நடத்துவதற்கு மகிந்த திட்டம்

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் வெற்றியையடுத்து மேலும் இரண்டு மாகாண சபைகளை உரிய காலத்துக்கு முன் கலைத்து தேர்தலொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளுமென நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வடமத்திய மாகாணசபையுடன் தெற்கு அல்லது ஊவா மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் வடமத்தி, தெற்கு மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தப்படுவது சாதகமெனவும் கருதப்படுகிறது.

ஊவா மாகாணசபையின் பதவிக் காலம் 2009.05.18ம் திகதியும், வடமத்திய மாகாண சபையின் பதவிக் காலம் 2009.08.11ம் திகதியும், தென் மாகாண சபையின் பதவிக் காலம் 2009.09.03ம் திகதியும் முடிவடையவுள்ளது. மேற்படி மூன்று மாகாணங்களிளும் முதலமைச்சர்களிடம் இதுபற்றி உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரியப்படுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: